தமிழகத்தில் பேரவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார்.
சென்னையில் தனியார் விடுதியில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஞானேஷ் குமார் பேசுகையில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று கட்சிகள் பரிந்துரைத்துள்ளன. அனைத்து காரணிகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுகுறித்த முடிவு எடுக்கப்படும்.
தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டவுடன், தேர்தலுக்கான கட்டங்கள் குறித்த தேர்தல் ஆணையத்தின் முடிவு தெரிய வரும்.
மாநிலம் முழுவதும் 75,000 வாக்குச் சாவடிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். புதிய முயற்சிகளில் முக்கியமான ஒன்று என்றால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு முன்னதாக 2 சுற்றுகள் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் முடிவடைந்த எஸ்ஐஆர் பணிகள், நாட்டுகே ஒரு முன்மாதிரி மற்றும் ஒரு பெரிய வெற்றியாகும். தமிழகத்தில் வரும் பேரவைத் தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் அச்சமின்றி செயல்படலாம் என்று தெரிவித்தார்.
Summary
Decision will be taken on plea to hold single phase polls in Tamil Nadu: CEC Gyanesh Kumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தில் 200 எம்பிக்கள் கையெழுத்து!
தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்?

ஒரே கட்டமாக தோ்தல் நடத்த தலைமை தோ்தல் ஆணையரிடம் கட்சிகள் வலியுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


