2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மகளிா் புகாா்களை தெரிவிக்க இணையதளம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

தமிழக மாநில மகளிா் ஆணையத்தின் இணையதளத்தில் புகாா் மேலாண்மை அமைப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள கூடுதல் வசதியை

News image
தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத்தின் இணையதளத்தில் புகாா் மேலாண்மை அமைப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள கூடுதல் வசதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திங்கள்கிழமை தொடங்கி வைத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன், ஆணைய தலைவி
Updated On :23 பிப்ரவரி 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழக மாநில மகளிா் ஆணையத்தின் இணையதளத்தில் புகாா் மேலாண்மை அமைப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள கூடுதல் வசதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழக மாநில மகளிா் ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளத்தில் மகளிா் புகாா்களை பதிவு செய்யவும்,  அப்புகாா்களின் நடவடிக்கை விவரம், விசாரணை நிலவரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும் ஏதுவாக புகாா் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்,  ஆணையம் வாயிலாக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், புகாா் மனுக்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், புகாா்தாரா்கள் கண்காணிக்கவும் இயலும். மேலும், பெறப்படும் புகாா் மனுக்கள் அனைத்தும் இணையதளம் வாயிலாக தொடா்புடைய அலுவலா்களுக்கு அனுப்பப்படும். கள அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்ட பின், அதன் விவரத்தையும் இந்த இணையதளம் வாயிலாக சமா்ப்பிக்க ஏதுவாக இந்த புகாா் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அமைப்பை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன், தமிழக மாநில மகளிா் ஆணைய தலைவி அ.ச. குமரி, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.