டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காஞ்சிபுரத்தில் கிராம உதவியாளர்கள் சாலை மறியல்: 183 பேர் கைது

கிராம உதவியாளர்கள் போராட்டம் பற்றி..

News image
கிராம உதவியாளர்கள் சாலை மறியல்
Updated On :9 பிப்ரவரி 2026, 8:48 am

இணையதளச் செய்திப் பிரிவு

காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக 183 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட கிளை சார்பில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர்ந்து 5 நாள்களாகக் காத்திருக்கும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் செய்தனர்.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் நடைபெற்ற சாலை மறியல் காரணமாக அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தி. முருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் என். நாராயணன், மாநிலச் செயலாளர் மகேந்திரபூபதி, மாவட்ட மகளிர் அணியின் துணைச் செயலாளர் அன்னபூரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிராம உதவியாளர்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தித் தொடர்ந்து 5 நாள்களாக காத்திருக்கும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீர் மறியல் காரணமாக காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்துக் காவல்துறை டிஎஸ்பி லோகநாதன் தலைமையிலான போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலைக் கைவிடாததால் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டதாக 92 பெண்கள் உள்பட மொத்தம் 183 பேர் கைது செய்யப்பட்டனர்.

summary

Bharatiya Janata Party (BJP) corporator Manjusha Nagpure was elected unopposed as mayor of the Pune Municipal Corporation (PMC) on Monday, while RPI (A) leader Parshuram Wadekar became deputy mayor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.