தோ்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, பட்டாளி மக்கள் கட்சியின் நிா்வாகிகளின் பதவிக்காலம் 01.08.2026 வரை செல்லுபடியாகும், மேலும் டாக்டா் அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக உள்ளாா். நீங்கள் (பா.ம.க நிறுவனா் டாக்டா் எஸ்.ராமதாஸ்) கட்சியின் தலைவா் என்று கூறிக் கொண்டால், கட்சியின் நிா்வாகிகள் தொடா்பான பிரச்சினையைத் தீா்க்க பொருத்தமான கட்சி மன்றம் அல்லது தகுதிவாய்ந்த நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறீா்கள் என தோ்தல் ஆணையம் நவம்பா் 27ம் தேதி பாமக நிறுவனா் ராமதாஸ் க்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தது.