தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் பதிலளிக்காவிட்டால் அபராதம்! - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

2010-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன், தனித் தீர்மானம் கொண்டு வந்தது பற்றி...

raj mohan

அமைச்சர் ராஜ்மோகன் - படம்: சட்டப்பேரவை

Published On :25 ஆகஸ்ட் 2026, 10:32 am IST

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) இருந்து விலக்களிக்கக் கோரி சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவால் 2010-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகியுள்ளதால், அவர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

சட்டப்பேரவையில் இதுதொடர்பான தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசிய அவர்,

"2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 - க்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு வேண்டும்.

இதற்கு மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" என்று கூறினார்.

Story image
Story image

Summary

Minister Rajmohan moves a special resolution seeking exemption from the TET exam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.