சென்செக்ஸ் 172 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 24,250 க்குக் கீழே நிறைவு!!பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கருப்பு நாள்! அரசியல் லாபத்திற்காக பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து! டிஆர்பி ராஜா

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது பற்றி முன்னாள் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கருத்து....

 TRB Raja

டிஆர்பி ராஜா - ENS

Published On :24 ஆகஸ்ட் 2026, 1:58 pm IST

புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்பும், விரிவான திட்டமிடலும் அரசியலுக்குப் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என முன்னாள் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில் தமிழக முன்னாள் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில்,

"இன்று தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தவெக அரசு அறிவித்துள்ளது.

சென்னைக்கு இரண்டு ஓடுபாதைகளுடன் கூடிய, உலகத்தரத்திலான புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்பும், விரிவான திட்டமிடலும் அரசியலுக்குப் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இதன் பாதிப்பைத் தொழில்துறை வல்லுநர்கள் நன்கு அறிவார்கள்.

இந்த முடிவின் மூலம் தமிழ்நாடு அண்டை மாநிலங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை தானாகவே வழங்கிவிட்டது என்று மற்ற மாநிலங்களின் முதலீட்டு ஈர்ப்பு நிறுவனங்கள் இந்த முடிவை அமைதியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும்.

சென்னையின் வளர்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் இனி மிகப்பெரிய தடைகளை எதிர்கொள்ளும். பெரிய விமானங்களை இயக்கக்கூடிய, 4,000 மீட்டருக்கும் அதிக நீளமுள்ள இரண்டு இணை ஓடுபாதைகளைக் கொண்ட, உண்மையிலேயே உலகத்தரத்திலான சர்வதேச விமான நிலையம் நமக்கு மிக அவசரமாகத் தேவை.

இந்தத் திட்டத்திற்காக இத்தனை ஆண்டுகள் கடுமையாக உழைத்த அதிகாரிகளே இந்த முடிவை ஆதரித்திருப்பார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் விமானப் போக்குவரத்து சார்ந்த அனைத்து அம்சங்களையும் நன்கு அறிந்த அவர்கள், தற்போதைய சூழலில் இதைவிடச் சிறந்த மாற்று வாய்ப்பு இல்லை என்பதை நன்றாகவே அறிவார்கள்.

சென்னையைச் சுற்றி 5,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை அடையாளம் காண, கிராமங்கள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் மற்றும் தற்போதைய விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் திமுக அரசு அனைத்து சாத்தியமான வாய்ப்புகளையும் விரிவாக ஆய்வு செய்தது.

பல ஆண்டுகள் நடைபெற்ற தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகு, நீண்டகால விமானப் போக்குவரத்துத் தேவைகளையும், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமாக உள்ள தேர்வுகளில் மிகக் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடமாகவே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதன் பாதிப்பு ஒரு விமான நிலையத்தோடு முடிந்துவிடப் போவதில்லை.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், பூந்தமல்லி முதல் காஞ்சிபுரம் வரையிலான ஒட்டுமொத்த தொழில் வழித்தடம் இந்தியாவின் மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 41% பங்களிக்கும் பகுதி மேலும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியும்.

சிறந்த துறைமுக இணைப்பு, தொழில்துறைக்குத் தேவையான நம்பகமான நீர்வளக் கட்டமைப்பு, உலகின் முக்கிய நகரங்களுடன் நேரடி விமான இணைப்பு ஆகியவை இந்தப் பிராந்தியத்தையும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலகின் மிக முக்கியமான உற்பத்தி மையங்களில் ஒன்றாக மாற்றியிருக்க முடியும்.

காலப்போக்கில் குறைந்தது 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியிருக்க முடியும்.

இத்தனை வாய்ப்புகளும் இப்போது வெறும் அரசியலுக்காக ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளன.

எங்கள் தலைவர், முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் திமுகவும் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது ஒன்றுதான்.

'தொழில் வளர்ச்சியை அரசியலாக்குவது, மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியையே விலையாகக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்'.

எனவே, முதல்வர் விஜய், மூத்த அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில், அவர்களது கருத்தை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் கேட்டு, இந்த முடிவு உண்மையிலேயே சரியானதுதானா என்பதை நேரடியாக உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றை அரசியல் காரணங்களால் தடம் புரள விடக்கூடாது.

சென்னைக்கும் தமிழ்நாட்டிற்கும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு புதிய, உலகத்தரத்திலான சர்வதேச விமான நிலையம் கட்டாயம் வேண்டும்.

அரசியலைவிட மாநிலத்தின் வளர்ச்சியையே பொறுப்புள்ள தலைவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

A black day; Parandur airport project cancelled for political gain: TRB Rajaa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.