ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

கருணாநிதி நினைவிடம் நோக்கி மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுவது பற்றி...

mk stalin

கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி - PTI Video

Published On :7 ஆகஸ்ட் 2026, 10:40 am IST

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளையொட்டி, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் அஞ்சலி கூட்டங்களும், அமைதிப் பேரணிகளும் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச் செயலர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு உள்ளிட்டோருடன் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Story image

தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Summary

Karunanidhi's Death Anniversary! Silent Procession Led by M.K. Stalin!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.