ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

"சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஏற்றுமதி அதிகரிப்பு: தமிழகம் 4-ஆம் இடம்'

நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து ஏற்றுமதி 11.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கோப்புப்படம்.

Published On :5 ஆகஸ்ட் 2026, 6:06 am IST

நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து ஏற்றுமதி 11.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா அளித்த எழுத்துபூர்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து கடந்த 2024-25-இல் ரூ.14.63 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்ற நிலையில், 2025-26இல் இது ரூ.16.36 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2023-24இல் ரூ.13.55 லட்சம் கோடி, 2022-23இல் ரூ.12.63 லட்சம் கோடி, 2021-22இல் ரூ.9.9 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றது.

கடந்த நிதியாண்டு ஏற்றுமதியில் குஜராத் (ரூ.4.05 லட்சம் கோடி) முதலிடத்திலும், கர்நாடகம் (ரூ.2.69 லட்சம் கோடி), மகாராஷ்டிரம் (ரூ.2.43 லட்சம் கோடி), தமிழகம் (ரூ. 2.12 லட்சம் கோடி) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன என்று தனது பதிலில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில், "கடந்த 2014-15இல் ரூ.1.47 லட்சம் கோடியாக இருந்த மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி, கடந்த 2025-26இல் ரூ.2.96 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக' அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.