ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெல்லையில் பூத்த சேனைக்கிழங்கு பூ! வியந்து பார்க்கும் மக்கள்!!

நெல்லையில் சேனைக்கிழங்கு பூ பூத்திருப்பதை மக்கள் வியந்து பார்த்து வருகிறார்கள்.

சேனைக்கிழங்கு பூ

சேனைக்கிழங்கு பூ - video grab

Published On :3 ஆகஸ்ட் 2026, 6:05 pm IST

நெல்லை மாவட்டம் தெருவில் சண்முகராஜ் என்பவர் தோட்டத்தில் அரிதாக பூத்த சேனைக்கிழங்கு பூ மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாரையடி தெருவில் வசித்து வருபவர் சண்முகராஜ். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

இவரது தோட்டத்தில் மஞ்சள் உட்பட்ட காய்கறி வகைகள் மற்றும் சேனைக்கிழங்கை பயிர் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று சேனைக்கிழங்கு பூ ஒன்று அரிதாக பூத்துள்ளது. அதை பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.

இந்த அரிய வகையான பூவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். தற்பொழுது இந்த பூவின் வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிஞ்சி பூ- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும். ஆனால், சேனைக் கிழங்கு பூ எப்போதாவது ஒரு முறைதான் பூக்கும் என்பதால், இதனை பலரும் நேரில் பார்த்திருப்பது அரிதானது என்று கூறப்படுகிறது.

Summary

Elephant foot yam flower blooms in Nellai; people gaze in amazement!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.