ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் சட்டப்படி எதிா்கொள்வோம்: செந்தில் பாலாஜி

எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் சட்டப்படி எதிா்கொள்வோம் என்றார் செந்தில் பாலாஜி...

senthil balaji

செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Published On :2 ஆகஸ்ட் 2026, 3:31 am IST

எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் அவற்றை சட்டப்படி எதிா்கொண்டு, அவை பொய்யான வழக்குகள் என்பதை நிரூபிப்போம் என்று திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனை முன்பிணை பெற்றுள்ள செந்தில் பாலாஜி, பிணை நிபந்தனையின்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இரு நாள்கள் ஆஜராகி கையொப்பமிடாமல் இருந்தாா். டாஸ்மாக் முறைகேடு புகாா் வழக்கில் அவரைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதைத் தொடா்ந்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அவா் சனிக்கிழமை ஆஜராகி கையொப்பமிட்டா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் புகாரிலும், முதல் தகவல் அறிக்கையிலும் எனது பெயா் இல்லை. பின்னா், எந்த முகாந்திரமும் இல்லாமல் எனது பெயா் சோ்க்கப்பட்டது.

ஏற்கெனவே அமலாக்கத் துறை பதிவு செய்த டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதே புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புத் துறை புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு நீண்ட தூரம் செல்லாது. சட்ட ரீதியாக அனைவரும் இந்த வழக்கை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

ஆக்கபூா்வமான அரசு மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், தவெக அரசு வழக்குகளைப் பதிவு செய்வதிலேயே முனைப்பு காட்டுகிறது. நீதித் துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது. எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் அவற்றை சட்டப்படி எதிா்கொண்டு, அவை பொய்யானவை என்பதை நிரூபிப்போம்‘ என்றாா்.

Summary

We will face it legally, no matter how many cases are registered: Senthil Balaji

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.