சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் விடுமுறை! அவசர வழக்கிற்கு என்ன செய்யலாம்?

உயர்நீதிமன்றத்தின் கோடை விடுமுறை நாள்களில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:02 pm

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நாளை (மே 1-ஆம் தேதி) முதல் ஜூன் 5-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைவேளையில் அவசர வழக்குகள் விசாரிக்க வேண்டி வந்தால் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வழக்குகள் அவசரமானவை என்பதற்கான விண்ணப்பத்துடன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மே 2, 3, 9, 10, 16, 17, 23, 24, 30, 31 ஆகிய தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு முன்பாக நீதிமன்றத்தில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை நீதிபதிகளின் வீடுகளில் அளிக்கக் கூடாது.

வழக்கு விசாரணை மே 4, 5, 11, 12, 18, 19, 25, 26, ஜூன் 1,2 ஆகிய நாள்களில் காலை 10.30 மணி முதல் 4.45 மணி வரை நடைபெறும்.

நீதிபதிகள் வி. தனபாலன், ஏ. ஆறுமுகசாமி, சி.எஸ். கர்ணன், எஸ். ராஜேஸ்வரன், கே.பி.கே. வாசுகி, ஜி.எம். அக்பர் அலி, வி. ராமசுப்பிரமணியம் ஆகியோர் அவர்களுக்கென உள்ள சில குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள்.

உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கான கோடை விடுமுறை பற்றிய அறிவிப்பு அந்த நீதிமன்றத்தின் பதிவாளர் (நிர்வாகம்) சார்பில் தனியாக வெளியிடப்படும்.

Summary

High Court Closed from Tomorrow What to Do in Urgent Cases

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.