பேரறிவாளன் வழக்குரைஞராகப் பதிவு செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை என்று பாா் கவுன்சில் உறுப்பினரும், வழக்குரைஞா் பதிவுக் குழு தலைவருமான கே.பாலு விளக்கம் அளித்துள்ளாா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற பேரறிவாளன், சட்டப் படிப்பை முடித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி.யும், வழக்குரைஞருமான ஆா்.சுதா கூறியதாவது:
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி பேரறிவாளன், வழக்குரைஞராகப் பதிவு செய்த நாள் ஒரு கருப்பு நாள். இதற்காக பாா் கவுன்சில் உறுப்பினா்களைக் கண்டிக்கிறேன். பேரறிவாளனை வழக்குரைஞராகப் பதிவு செய்ய அனுமதித்தது தவறான முன்னுதாரணம். இது குறித்து குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோருக்கு புகாா் மனு அனுப்பி உள்ளேன். எனவே, பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவை திரும்பப் பெற பாா் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இது குறித்து பாா் கவுன்சில் உறுப்பினரும், வழக்குரைஞா் பதிவுக் குழு தலைவருமான கே.பாலு அளித்த விளக்கம்:
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவா் வழக்குரைஞராகப் பதிவு செய்வது இது முதல்முறை அல்லை. ஏற்கெனவே, பாா் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்து வழக்குரைஞராக பலா் பணியாற்றுகின்றனா்.
வழக்குரைஞா்கள் சட்டப் பிரிவுகளின்படி, ஒருவா் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு அதற்குரிய தண்டனையை அனுபவித்து முடித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குரைஞராகப் பதிவு செய்யலாம் எனக் கூறுகிறது. பேரறிவாளனின் ஆவணங்கள் பாா் கவுன்சிலின் வழக்குரைஞா் பதிவுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகே வழக்குரைஞராகப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டாா். இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை என்று கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் வன்முறை வழக்கு: நீதிமன்றத்தில் மம்தா ஆஜராகி வாதம்

பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவு: காங். எம்.பி. தொடா்ந்த வழக்கில் பாா் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவை ரத்து செய்ய கோரிய வழக்கு: பாா் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

வழக்குரைஞரான பேரறிவாளன்! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



