திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை சென்னை திரும்பினார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 3:42 am IST

கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை சென்னை திரும்பினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்ததையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கு கடந்த 25-ஆம் தேதி வந்தார். பாம்பார்புரம் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவர், கொடைக்கானல் ஏரிச் சாலை, நகராட்சி நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைப்பயிற்சி மேற்கொண்டதுடன், ஏரிச் சாலைப் பகுதியில் மிதிவண்டியும் ஓட்டினார்.

4 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானலிலிருந்து காரில் மதுரைக்குப் புறப்பட்டார். அப்போது, தங்கும் விடுதி முன் கூடியிருந்த பொதுமக்கள் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச் சாலையில் சென்ற போது மூஞ்சிக்கல், உகார்த்தேநகர், செண்பகனூர், பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அளித்த மனுக்களை முதல்வர் பெற்றுக் கொண்டார்.

பின்னர், பகல் 12.50 மணிக்கு மதுரைக்கு வந்த முதல்வர், பிற்பகல் ஒரு மணிக்கு தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.