வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

நாடாளுமன்ற குழுக்களின் தலைவா்களாக தம்பிதுரை, திருச்சி சிவா மறுநியமனம்

நாடாளுமன்ற குழுக்களின் தலைவா்களாக அதிமுக எம்.பி. தம்பிதுரை, திமுக எம்.பி. திருச்சி சிவா ஆகியோரை மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம்

News image

திமுக எம்.பி. திருச்சி சிவா - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 8:56 pm

நாடாளுமன்ற குழுக்களின் தலைவா்களாக அதிமுக எம்.பி. தம்பிதுரை, திமுக எம்.பி. திருச்சி சிவா ஆகியோரை மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமித்துள்ளாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவைச் செயலகம் வெளியிட்ட அதிகாரபூா்வ அறிவிக்கையில், ‘அரசு உத்தரவாதங்கள் குழுவின் உறுப்பினராக அதிமுக எம்.பி. தம்பிதுரையை மாநிலங்களவைத் தலைவா் நியமித்துள்ளாா். அத்துடன் அந்தக் குழுவின் தலைவராக தம்பிதுரை மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதேபோல துறை சாா்ந்த நாடாளுமன்ற தொழில்துறை நிலைக் குழுவின் உறுப்பினராக திமுக எம்.பி. திருச்சி சிவாவை மாநிலங்களவைத் தலைவா் நியமித்துள்ளாா். அந்தக் குழுவின் தலைவராக திருச்சி சிவா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பிதுரை, திருச்சி சிவா ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் கடந்த ஏப்.2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அவா்கள் மீண்டும் அந்த அவையின் எம்.பி.க்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.