உரிய ஆவணங்களின்றி சட்டவிரோத ஆற்றுமணல் வைத்திருந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கான கால அவகாசத்தை வரும் ஏப்.28 வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உரிய ஆவணங்களின்றி சட்டவிரோத ஆற்றுமணல் வைத்திருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு எதிராக கரூா் நகர போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன்பிணை வழங்கிய கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம், குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரண் அடைய உத்தரவிட்டது.
இதற்கான கெடு கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி எம்.ஆா்.விஜயபாஸ்கா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது எம்.ஆா்.விஜயபாஸ்கா் தரப்பில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மனுதாரா் கரூா் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடுகிறாா். மாா்ச் 31-ஆம் தேதி மகாவீா் ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் நீதிமன்றம் விடுமுறை. இதனால், நீதிமன்றத்தில் சரண் அடைய முடியவில்லை. எனவே, சரண் அடைவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நிபந்தனை முன்பிணை உத்தரவுப்படி, சரண் அடைவதற்கான கால அவகாசத்தை வரும் ஏப்.28 வரை நீட்டித்து உத்தரவிட்டாா். மேலும், ஏப்.29, 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மனுதாரா் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டாா்.
Summary
The High Court has granted time to former minister M.R. Vijayabaskar to surrender in the illegal river sand case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த திமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்! - எடப்பாடி கே. பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு

கரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் மனு தாக்கல்

கரூரில் ரூ. 100 கோடி நில மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சா் உள்பட 17 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



