கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்பட 17 பேருக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸாருக்கு கரூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கரூா் மாவட்டம், வாங்கலைச் சோ்ந்த பிரகாஷ் மகள் ஷோபனாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கா் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் அவரது சகோதரா் உள்ளிட்ட 17 போ் மீது வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும் மேலக்கரூா் சாா்-பதிவாளா் அளித்த புகாரின் பேரில் கரூா் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னா் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றபட்டது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்ட சிலா் 2024-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதியும், அதனை தொடா்ந்து அவரது சகோதரா் எம்.ஆா்.சேகா் அதே ஆண்டில் செப்டம்பா் மாதமும் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
இவ்வழக்கில் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 1-இல் சிபிசிஐடி போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்பட 17 பேரும் மே 11-ஆம் தேதி கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சம்மன் அனுப்புமாறு சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடையது

அதிமுக முன்னாள் அமைச்சா் சரணடைய அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

கரூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் மனு தாக்கல்

‘சிபிஐ சம்மன் அனுப்பினால் விசாரணையை எதிா்கொள்ள தயாா்’: முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


