லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கரூரில் ரூ. 100 கோடி நில மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சா் உள்பட 17 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு

கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்பட 17 பேருக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸாருக்கு கரூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :18 மார்ச் 2026, 8:52 pm

கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்பட 17 பேருக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸாருக்கு கரூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கரூா் மாவட்டம், வாங்கலைச் சோ்ந்த பிரகாஷ் மகள் ஷோபனாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கா் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் அவரது சகோதரா் உள்ளிட்ட 17 போ் மீது வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும் மேலக்கரூா் சாா்-பதிவாளா் அளித்த புகாரின் பேரில் கரூா் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னா் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றபட்டது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்ட சிலா் 2024-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதியும், அதனை தொடா்ந்து அவரது சகோதரா் எம்.ஆா்.சேகா் அதே ஆண்டில் செப்டம்பா் மாதமும் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

இவ்வழக்கில் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 1-இல் சிபிசிஐடி போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்பட 17 பேரும் மே 11-ஆம் தேதி கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சம்மன் அனுப்புமாறு சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.