நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பேசுகையில், "நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படும். இதன் தோல்வியை சோனியா காந்தி, மமதா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் ஆகியோர் உறுதி செய்வர்.
அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்தால், மசோதாவை நிறைவேற்ற முடியாது.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, சிபிஐ உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள், நாடாளுமன்றத்தில் மசோதாவை எதிர்த்தன. தற்போது, மசோதாவை 180 உறுப்பினர்கள்எதிர்க்கின்றனர். இந்த எண்ணிக்கை, மேலும் 190 வாக்குகளாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, மக்களவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேசுகையில், "மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையானது, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்திவரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பாதிக்கும். சிறந்த ஆட்சி வழங்கப்படும்போதிலும், இத்தகைய அணுகுமுறையால் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கை, நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் குரலைப் பலவீனப்படுத்தி, கூட்டாட்சி முறையின் உணர்வைக் குலைக்கக் கூடும்.
நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் என்பது, வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல; அது நீதி, பங்களிப்பு, சமநிலையைப் பற்றியது.
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரின்கீழ் தொகுதி மறுவரையறைக் குழு அமைக்கப்படுவது நியாயமற்றது" என்றும் தெரிவித்தார்.
Summary
Delimitation bill will be defeated in Parliament: Congress leader Chidambaram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி

பாலன் தி பாய் டிரைலர் அறிவிப்பு!

முதல்வர் விஜய்யுடன் ப. சிதம்பரம் சந்திப்பு! எம்.பி. சீட் கேட்கப்பட்டதா?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் செங்கோல் நாள் கொண்டாட்டம்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


