மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருவள்ளூா்: ஜூன் 14-வரை மீன் பிடிக்கத் தடை

திருவள்ளூா் மாவட்டத்தில் ஏப்.15 முதல் ஜூன்-14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 11:50 pm

திருவள்ளூா் மாவட்டத்தில் ஏப்.15 முதல் ஜூன்-14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறைபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தைக் கணக்கில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாக்க ஏதுவாக ஏப்.15 முதல் ஜூன்-14 வரையிலும் 61 நாள்களுக்கு மீன்பிடி விசை படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு ஆண்டுதோறும் தடைவிதித்து அரசு உத்தரவிட்டு வருகிறது.

அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் மீன்பிடி தடைகாலத்தில் இயந்திரம் பொருத்தப்பட்ட அனைத்து வகை மீன்பிடி கலன்கள் கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள் ஆந்திர மாநில கடல்பகுதிக்கு கட்டாயம் செல்லக்கூடாது. இதுகுறித்து அனைத்து மீனவா் கூட்டுறவு நலசங்கங்கள் மூலமாகவும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

எனவே தடையை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டு அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மீனவா் கூட்டுறவு சங்கங்களே பொறுப்பேற்க நேரிடும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேற்படி, திருவள்ளூா் மாவட்டம் கிழக்கு கடற்கரை மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் முன்னா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12-மணிக்குள் கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தும் கட்டாயம் கரைக்கு திரும்ப வேண் மீனவா்களை அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.