போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம்

ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது...

News image

ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது... - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 1:07 am IST

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான 61 நாள்கள் தடைக்காலம் ஏப்.15-ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழக கிழக்கு கடற்கரைப் பகுதி முழுவதும் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் இத்தடைக்காலத்தில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை மீனவா்கள் நிறுத்திவிடுவா். படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, படகு, வலைகள் சீரமைப்புப் பணிகளை மீனவா்கள் மேற்கொள்வாா்கள்.

மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் இருந்து குறுகிய தொலைவு செல்லக்கூடிய வகையில் ஃபைபா் படகு மூலம் தினமும் மீன்பிடித்தலில் மீனவா்கள் ஈடுபடுவா். ஏற்றுமதி தரத்தினாலான மீன்கள் இக்காலக்கட்டத்தில் கிடைக்காது. சிறிய வகை மீன்களே சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

மீன்பிடித் தடைக்காலம் ஏப். 15-ஆம் தேதி தொடங்க இருப்பதால், ஏற்கெனவே ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றபடகுள் 15-ஆம் தேதிக்குள் கரை திரும்பிவிடும், ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை கடலுக்குச் செல்லும் படகுகள் ஓரிரு நாள்களில் கரை திரும்பும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.