திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று காலை தேர்தல் பிரசாரத்திற்காக கொட்டப்பட்டு - பொன்மலை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தேர்தல் பறக்கும் படையினர் அமைச்சரின் வாகனத்தை மறித்து சோதனையில் ஈடுபட்டனர். பறக்கும் படையினரின் சோதனைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
சோதனையில் பணம் மற்றும் பரிசுப் பொருள் எதுவும் இல்லாததால் அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தை செல்ல தேர்தல் பறக்கும் படையினர் அனுமதித்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
Summary
Election Flying Squad conducted a search of the vehicle belonging to Thiruverumbur constituency candidate and Minister Anbil Mahesh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!

நேற்று முதல்வர் ஸ்டாலின்; இன்று அமைச்சர் துரைமுருகன் வாகனத்தில் பறக்கும் படை சோதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



