தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தமிழக அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு செய்யப்பட்ட முன்னேற்பாடுகள், பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தேர்தல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு வருகிற ஏப். 23 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. நேற்று(ஏப். 7) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஏப். 9 ஆகும்.
தமிழக பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
CEC gyanesh kumar discussion with tn chief electoral officer for assembly election
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர்!
வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெறும்! - ஞானேஷ்குமார்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



