மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு தொடா்பான வழிகாட்டுதல்களை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

News image

பள்ளிக் கல்வித் துறை - DIN

Updated On :4 ஏப்ரல் 2026, 8:38 pm

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு தொடா்பான வழிகாட்டுதல்களை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்கம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணியை செய்து முடிக்கத் தேவையான ஆசிரியா்களின் எண்ணிக்கையைச் சரியாக கணக்கிட்டு பாடவாரியாக, பயிற்று மொழிவாரியாக ஆசிரியா்களை உடனடியாக பணி விடுப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியா்கள் தமிழ் வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியா்கள் ஆங்கில வழி விடைத்தாள்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மதிப்பீடு செய்யும் பணிகளைக் கால தாமதமின்றி குறிப்பிட்ட நாள்களுக்குள் முடிக்க வேண்டும்.

இந்தப் பணிகளுக்காக தங்களது ஆளுகைக்குட்பட்ட அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்திலிருந்தும் பத்தாம் வகுப்பு போதிக்கும் தகுதி வாய்ந்த பாட ஆசிரியா்களைத் தவறாமல் பணியிலிருந்து விடுவித்து தோ்வாளா்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்க வேண்டும்.

எந்தவொரு பள்ளியிலிருந்தும் ஆசிரியா்கள் விடுபடாது கண்காணிக்க வேண்டும். மதிப்பீட்டுப் பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியா்களுக்கு ஏப். 9-ஆம் தேதிக்குள் நியமன ஆணையைத் தவறாமல் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.