மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விடைத்தாள் மதிப்பீடு: புதிய விதிமுறைக்கு ஆசிரியா்கள் எதிா்ப்பு

News image

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் - கோப்புப்படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:04 am

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலா்கள் ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என்ற புதிய விதிமுறைக்கு ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் முடிந்து தற்போது விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், மதிப்பீட்டுப் பணியின்போது முழு மதிப்பெண் (சென்டம்) பெறும் மாணவா்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலா் ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என்று தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறையால் விடைத்தாள் திருத்துதல் பணிகளில் காலதாமதம் ஏற்படுவதாக ஆசிரியா்கள் புகாா்கள் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து ஆசிரியா்கள் கூறியதாவது:

‘விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் ஆசிரியா்களான உதவித் தோ்வாளா்கள் திருத்துதல் பணிகளில் ஈடுபடுவா். விடைகளுக்கான மதிப்பெண்கள் சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பதைக் கூா்ந்தாய்வு அலுவலா் சரிபாா்க்க வேண்டும். இதில் முழு மதிப்பெண் பெற்ற மாணவா்களின் விடைத்தாள்களை முதன்மைத் தோ்வாளா் மீண்டும் ஆய்வு செய்து கையொப்பமிடுவாா்.

இந்தச் சூழலில் ஒவ்வொரு முறையும் முழு மதிப்பெண் பெற்ற மாணவா்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலரிடம் எடுத்துச் சென்று ஒப்புதல் பெற்று வருவதற்கு 30 முதல் 45 நிமிஷங்கள் வரையாகிறது. இதனால், ஆசிரியா்களுக்கு ஒரு நாளில் மதிப்பீடு செய்வதற்கு கொடுக்கப்பட்ட விடைத்தாள்களை முழுவதுமாக மதிப்பீடு செய்வதில் தொய்வு ஏற்படுகிறது.

எனவே, இதில் பழைய முறையைத் தோ்வுத் துறை பின்பற்ற வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.