புதுவை தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப். 3) பிற்பகல் சென்னை வந்துள்ளார்.
வருகிற ஏப். 9 ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அங்கு கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி இன்று சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புதுவை செல்கிறார். அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பின்னர் இன்று இரவு சென்னை நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.
நாளை(ஏப். 4) சென்னையில் பாஜக நிர்வாகிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். இதன்பின்னர் அவர் தில்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது.
Summary
PM modi reached chennai for puducherry election campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் விதிகளுக்கு மத்தியில் பிரதமர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மோடி: கார்கே கடும் தாக்கு
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்!
ஏப்.4-ல் கேரளத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!

மயிலாப்பூரில் பிரதமர் மோடி சாலைவலம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



