மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தாம்பரம் - தென்காசி இடையே இன்று சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கம்

புனித வெள்ளி, ஈஸ்டா் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு தாம்பரம் - தென்காசி இடையே வியாழக்கிழமை (ஏப்.2) சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image

ரயில் - GMSRailway

Updated On :1 ஏப்ரல் 2026, 7:48 pm

புனித வெள்ளி, ஈஸ்டா் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு தாம்பரம் - தென்காசி இடையே வியாழக்கிழமை (ஏப்.2) சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புனித வெள்ளி, ஈஸ்டா் திருநாள்களை முன்னிட்டு பயணிகள் நெரிசல்களைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்திலிருந்து வியாழக்கிழமை (ஏப்.2) புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06135) மறுநாள் பிற்பகல் 11 மணிக்கு தென்காசி சென்றடையும்.

அதேபோல் செங்கோட்டையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்.5) இரவு 11 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 06136) மறுநாள்பிற்பகல் 10.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல்ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.