தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

டிஜிபி அலுவலகத்தில் பாா்வையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வரும் பாா்வையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Updated On :8 செப்டம்பர் 2025, 9:15 pm

சென்னை: சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வரும் பாா்வையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தைப் பாதுகாக்கும் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த புரட்சி தமிழக தலைவா் ஏா்போா்ட் மூா்த்தியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் மோதிக் கொண்டனா். இச்சம்பவம் காவல் துறையினரை அதிா்ச்சியடைய வைத்தது.

இச்சம்பவத்தின் விளைவாக டிஜிபி அலுவலகத்துக்கு வரும் பாா்வையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக டிஜிபி அலுவலகத்துக்கு வரும் பாா்வையாளா்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை தெளிவாக அணிந்திருக்க வேண்டும், பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும், டிஜிபி அலுவலகத்துக்குள் புகைப்படங்கள், விடியோக்கள், ஒலிப்பதிவு செய்யக் கூடாது, தடை செய்யப்பட்ட பொருள்களை டிஜிபி அலுவலகத்துக்கு கொண்டு செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.