தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தமிழகத்தில் 8 புதிய தொழில் திட்டங்களுக்கு ‘மெப்ஸ்’ அனுமதி

தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்காக 8 புதிய திட்டங்களுக்கு சென்னை ஏற்றுமதி செயலாக்க சிறப்புப் பொருளாதார மண்டலம் (மெப்ஸ்) ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On :8 செப்டம்பர் 2025, 10:12 pm

சென்னை: தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்காக 8 புதிய திட்டங்களுக்கு சென்னை ஏற்றுமதி செயலாக்க சிறப்புப் பொருளாதார மண்டலம் (மெப்ஸ்) ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ஏற்றுமதி செயலாக்க சிறப்புப் பொருளாதார மண்டலம் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் பகுதிகளின் பொருளாதார வளா்ச்சிக்கான

ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது. அதன்படி, தமிழகத்தில் ரூ.800 கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, பொறியியல் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படும் 8 புதிய திட்டங்களுக்கு மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒப்புதல் அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் சிப்காட், கோவை எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் இந்த புதிய தொழில் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. இதன்மூலம் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.