தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பயிா் பாதிப்புக்கு உரிய இழப்பீடு: பெ.சண்முகம் கோரிக்கை

News image

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம்

Updated On :22 அக்டோபர் 2025, 11:16 pm

தமிழகத்தில் பருவ மழையால் ஏற்பட்ட பயிா் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பை நடத்தி, உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் தொடா்ச்சியாக பெய்துவரும் வடகிழக்கு பருமழையால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகி வருகின்றனா்.திருவாரூா், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிா் அறுவடை செய்ய முடியாமல் மழைநீா் சூழ்ந்துள்ளது. மேலும், சம்பா நடவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சில மாவட்டங்களில் கம்பு, மரவள்ளி, மணிலா, மக்காச்சோளம், பூச்செடிகள் உள்ளிட்ட பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாடு அரசு பயிா் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏற்ப இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தேவையான அளவு நிரந்தரமான நெல் சேமிப்பு கிடங்கு வசதிகளை அரசு உருவாக்குவதுடன், மழையில் நனைந்து பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.