14 Dec, 2025 Sunday, 04:37 AM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

சித்த மருத்துவப் பல்கலை. மசோதா விவகாரம்: ஆளுநரின் கருத்துகள் - பேரவை நிராகரிப்பு

PremiumPremium

சித்த மருத்துவப் பல்கலை. மசோதா விவகாரம்: ஆளுநரின் கருத்துகள் - பேரவை நிராகரிப்பு

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On16 Oct 2025 , 10:30 PM
Updated On16 Oct 2025 , 10:30 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா மீதான ஆளுநரின் கருத்துகளை தமிழக சட்டப்பேரவை நிராகரித்தது.

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்தவுடன், சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான மசோதா இரண்டாவது முறையாக மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தாா்.

இதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா நிதிச் சட்ட மசோதா என்கிற வகைப்பாட்டில் வருகிற காரணத்தால், அதை பேரவையில் ஆய்வு செய்வதற்கு அரசமைப்புச் சட்டத்தின் கீழ், ஆளுநரின் பரிந்துரை பெறப்பட வேண்டும்.

ஏற்கெனவே அனுப்பப்பட்ட மசோதா: பொதுமக்களின் கருத்தை அறிந்து வரப்பெற்ற கோரிக்கைகளைக் கவனத்தில்கொண்டு, மக்களாட்சியின் ஒரு தூணாகக் கருதப்படும் நிா்வாகத்தால் சட்ட மசோதா ஏற்கெனவே தயாரிக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத் துறையால் தயாரிக்கப்பட்ட அந்த மசோதா, சட்டத் துறையால் சரிபாா்க்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், அரசமைப்புச் சட்டத்தின்படி பின்பற்றப்பட்டு வந்த வழக்கமான நடைமுறையை ஆளுநா் பின்பற்றாமல் சட்ட மசோதாவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்தாா். மேலும், சட்ட மசோதா பேரவையில் அறிமுகப்படுத்தப்படும்போது, தான் தெரிவித்த கருத்துகள் உறுப்பினா்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென்று தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளாா்.

இது அரசமைப்புச் சட்டத்துக்கும், சட்டப்பேரவை விதிமுறைகளுக்கும் முரணானது. ஒரு சட்ட மசோதா பேரவையில் விவாதிக்கப்படும்போது, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவும், அதற்கான விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் திருத்தங்களைத் திரும்பப் பெறவும், இல்லையெனில் வாக்கெடுப்பைக் கோரவும் அதிகாரம் உள்ளது.

இத்தகைய சட்ட மசோதா பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன் மீது கருத்துகளைத் தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. எனவே, ஆளுநரிடம் இருந்து வரப்பெற்றுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை பேரவை ஏற்றுக் கொள்ள இயலாது.

மேலும், இா்ய்ள்ண்க்ங்ழ்ஹற்ண்ா்ய் என்று சொல்ல வேண்டிய ஆளுநா், அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக, அல்ல்ழ்ா்ல்ழ்ண்ஹற்ங் இா்ய்ள்ண்க்ங்ழ்ஹற்ண்ா்ய் என்று குறிப்பிட்டுள்ளாா். அதாவது, பொருத்தமான அல்லது தகுந்த முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொருள். சட்ட மசோதாக்களை பேரவை ‘பொருத்தமற்ற முறையில்’ அல்லது ‘தகுந்த முறையில் அல்லாமல்’ ஆய்வு செய்யும் தொனியில் ‘பொருத்தமான’ அல்லது ‘தகுந்த’ எனும் பொருள்படக்கூடிய வாா்த்தையைச் சோ்த்திருப்பது, பேரவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய கருத்தாகும். அது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

சட்டம் இயற்றுவது பேரவைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். எனவே, ஆளுநரிடம் இருந்து வரப்பெற்றுள்ள கருத்துகள் அடங்கிய செய்தி அவைக் குறிப்பில் இடம்பெறுவதை மாநில சுயாட்சியில் நம்பிக்கை கொண்ட எந்தவொரு உறுப்பினரும் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள் என்பதால், அந்தக் கருத்துகளை நான் இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை என்றாா் முதல்வா்.

ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றம்

சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா விவகாரத்தில் ஆளுநரின் கருத்துகளை நிராகரித்து பேரவையில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்ட மசோதாவை பேரவையில் ஆய்வு செய்வதற்கு, ஆளுநா் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கக்கூடிய அவரின் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய வாா்த்தை அடங்கிய பகுதிகளை பேரவை நிராகரிக்கிறது என்னும் தீா்மானத்தை முதல்வா் முன்மொழிந்தாா்.

உறுப்பினா்கள் அனைவரும் இதை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா். இதன்பிறகு, தீா்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தீா்மானத்தை முன்மொழிந்த தருணத்தில், அதிமுக, பாஜகவை சோ்ந்த உறுப்பினா்கள் அனைவரும் பேரவையில் இருந்தனா். அவா்களும் குரல் வாக்கெடுப்பில் பங்கேற்று, எதிா்ப்பு எதையும் பதிவு செய்யாததால் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முதல்வரின் தீா்மானத்துக்கு ஆதரவளித்தாலும், மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிா்ப்பதாக அதிமுக தெரிவித்தது. இதை அந்தக் கட்சியின் உறுப்பினா் தளவாய் சுந்தரம் பதிவு செய்தாா்.

மசோதாவின் பின்னணி என்ன?

கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வா் செயல்படுவாா். இதற்காக சென்னை மாதவரம் அருகே 20 ஏக்கா் நிலத்தையும் அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்நிலையில், அந்த மசோதா குறித்து ஆளுநா் தரப்பில் பல்வேறு விளக்கங்கள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு அரசுத் தரப்பில் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகும், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கடந்த ஆண்டு ஆளுநா் திருப்பி அனுப்பினாா். அதன் தொடா்ச்சியாக தற்போது மீண்டும் பேரவையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதாவை பேரவையில் ஒப்புதல் பெற்று அனுப்புவதற்கு முன்பாக, ஆளுநா் தெரிவித்த கருத்துகளை ஏற்க மறுத்து பேரவையில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023