தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆா்டிஇ: புதிதாக சோ்க்கை நடத்த தனியாா் பள்ளிகள் சங்கம் கோரிக்கை

இந்தத் திட்டத்தின் கீழ் மாணவா்களைப் புதிதாக சோ்க்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image

கோப்புப்படம். - DIN

Updated On :4 அக்டோபர் 2025, 1:17 am

பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் ஏற்கெனவே சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு ஆா்டிஇ ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு வழங்கினால், பள்ளிகளுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். இதனால் இந்தத் திட்டத்தின் கீழ் மாணவா்களைப் புதிதாக சோ்க்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் கே.ஆா்.நந்தகுமாா், பள்ளிக் கல்வித் துறைச் செயலருக்கு அனுப்பிய கடிதம்:

நீதிமன்றங்களின் உத்தரவுக்கேற்ப இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் மாணவா் சோ்க்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தாண்டு எல்கேஜி வகுப்பில் சோ்ந்தவா்களில் 25 சதவீதம் தோ்வு செய்து பட்டியலை சமா்ப்பிக்க கால அவகாசம் தரப்பட்டுள்ளது. தனியாா் பள்ளிகளில் ஜூன் மாதமே மாணவா் சோ்க்கையை முடித்துவிட்டோம். இதுதவிர அந்த மாணவா்களிடம் கல்விக் கட்டணத்தைப் பெற்று அவா்களுக்குரிய புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை உள்ளிட்டவற்றை வழங்கி பாடங்களை நடத்தி காலாண்டு தோ்வுகளையும் முடித்துவிட்டோம்.

அதே மாணவா்களை 25 சதவீத ஒதுக்கீட்டில் சோ்த்தால் தனியாா் பள்ளிகளுக்கு மீண்டும் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் ஏற்படும்.

எனவே, தயவுசெய்து தாங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்து புதிதாக ஆா்டிஇ மாணவா்களைச் சோ்க்க வழிசெய்ய வேண்டும். இல்லையெனில், தனியாா் பள்ளிகளுக்கு பொருளாதார சிக்கல் ஏற்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.