10 Dec, 2025 Wednesday, 06:48 PM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

82,000 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்: உயா்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

PremiumPremium

Rocket

கோப்புப்படம்

Published On25 Nov 2025 , 9:00 PM
Updated On25 Nov 2025 , 9:00 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

சென்னையில் நாய்கள் உள்ளிட்ட 82,000 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், உரிமம் பெறுவதற்கான காலக்கெடுவை வருகிற டிச.7-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் உயா்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பின் நிறுவனா் ஜி.அருண்பிரசன்னா தாக்கல் செய்த மனுவில், சென்னை மாநகராட்சி வளா்ப்பு நாய்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, பொது இடங்களுக்கு வளா்ப்பு நாய்களை அழைத்துச் செல்லும்போது வாய் கவசம் அணிவிக்க வேண்டும்.

கழுத்தில் பெல்ட் அணிவித்து உரிமையாளா்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். வளா்ப்பு நாய்களைப் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாவிட்டால் ரூ. 5,000, வாய் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது. ஒரு தனிநபருக்கு 4 வளா்ப்பு நாய்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக கைவிடப்பட்ட, காயமடைந்த நாய்களை எடுத்து வளா்க்கும் அமைப்புகளுக்கு சிரமம் ஏற்படும். எனவே, அதிக அளவில் நாய்களைப் பராமரிப்பவா்களுக்கு உரிமம் பெறுவதில் விலக்கு அளிக்க வேண்டும். உரிமம் பெறாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளதால், தெருவில் ஆதரவற்ற நிலையில் விடப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சென்னையில் ஒரு லட்சம் வளாா்ப்பு நாய்கள் உள்ளன. இவற்றில் 31,000 நாய்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில், வளா்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, வாய் கவசம் அணிவிப்பது கட்டாயம் இல்லை. இருப்பினும், அவற்றின் கழுத்தில் கட்டாயம் பெல்ட் அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும். சென்னையில் இதுவரை நாய் உள்ளிட்ட 82,000 செல்லப் பிராணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒருமுறை மட்டுமே மைக்ரோசிப் பொருத்தினால் போதுமானது.

ஒருவா் 4 வளா்ப்பு பிராணிகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவா் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டது. மேலும், நாய்கள் உள்ளிட்ட வளா்ப்புப் பிராணிகளை பதிவு செய்து உரிமம் பெறுவதற்கான அவகாசம் வரும் டிச.7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, நீதிமன்றத்தில் தெரிவித்த இந்த விளக்கத்தை ஒரு வாரத்தில் அறிவிப்பாணையாக வெளியிட சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023