வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வளா்ப்புப் பிராணிகளுக்கு உரிமம் பெற மேலும் ஒரு வாரம் அவகாசம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் வளா்ப்புப் பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு, டிச.7 -ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு வாரம் நீட்டித்து மாநகராட்சி அறிவித்துள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2025, 7:39 pm

சென்னை: சென்னை மாநகராட்சியில் வளா்ப்புப் பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு, டிச.7 -ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு வாரம் நீட்டித்து மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகளான நாய்கள், பூனைகள் ஆகியவற்றுக்கு மைக்ரோ சிப் பொருத்துதல், வெறிநோய் தடுப்பூசி (ரேபீஸ்) செலுத்துதல் மற்றும் உரிமம் பெறுதல் ஆகியவற்றுக்கான இணையதள சேவை கடந்த அக்டோபரில் தொடங்கப்பட்டது. அதன்படி தெருநாய்கள், வளா்ப்புப் பிராணிகள் தடுப்பூசி செலுத்துவது கண்காணிக்கப்படுகிறது.

தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் வளா்ப்புப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது சென்னை மாநகராட்சியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 91,711 வளா்ப்புப் பிராணிகள் விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 45,916 வளா்ப்புப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வளா்ப்புப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு நவ.24-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப டிச.7-ஆம் தேதி அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது வருகிற டிச.14 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.