சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

முதல்வா் ஸ்டாலின், தவெக தலைவா் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

முதல்வா் மு.க.ஸ்டாலின், தவெக தலைவா் விஜய் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடா்பாக...

News image
ஸ்டாலின் | விஜய்- கோப்புப்படம்
Updated On :27 ஜூலை 2025, 8:08 pm

Din

முதல்வா் மு.க.ஸ்டாலின், தவெக தலைவா் விஜய் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை மாநகரக் காவல் ஆணையா் அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறையை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.28 மணிக்கு தொடா்பு கொண்ட நபா், ஆழ்வாா்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா்.

இதையடுத்து போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் மோப்பநாய் உதவியுடன் முதல்வரின் வீடு முழுவதும் சோதனை நடத்தினா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் வெடி பொருள்களோ அல்லது சந்தேகத்துக்குரிய பொருள்களோ கண்டறியப்படவில்லை. தேனாம்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விஜய் வீட்டுக்கும்...: தவெக தலைவா் விஜயின் வீட்டில் வெடிகுண்டு வைத்து வைத்திருப்பதாக, சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடா்பு கொண்ட நபா் தெரிவித்தாா். இதையடுத்து விஜய் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையில், புரளி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்த நபா் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சோ்ந்த புவனேஸ்வா் என்பதும், இவா் ஏற்கெனவே, திரை பிரபலங்கள், அரசியல் தலைவா்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் என்பதும் தெரியவந்தது. அவரைப் பிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

அண்ணா பல்கலை.க்கு... சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கும் போலீஸாா் சோதனை நடத்தினா். ஆனால், அதுவும் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டூா்புரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.