அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

வாக்காளா்கள் நீக்கம்: திமுக மாவட்டச் செயலா்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை

திமுக மாவட்டச் செயலா்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை...

News image
மு.க. ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :20 டிசம்பர் 2025, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் 97.34 லட்சம் வாக்காளா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து திமுக மாவட்டச் செயலா்களுடன் அந்தக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (டிச.21) ஆலோசனை நடத்துகிறாா்.

எஸ்ஐஆா் பணியின்போது, வீடுகள்தோறும் வாக்காளா் கணக்கீட்டு படிவத்தை விநியோகம் செய்வதிலும், திரும்பப் பெறுவதிலும் வாக்குச் சாவடி நிலை ஆலுவலா்களுடன் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவா்களும் பெருமளவில் ஈடுபட்டனா். சுமாா் 85 லட்சம் போ் நீக்கப்படலாம் என திமுக கூறியிருந்த நிலையில், தற்போது 97 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.

இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு இணையவழி வாயிலாக மாவட்டச் செயலா்கள் கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் சனிக்கிழமை அறிவித்தாா்.

மேலும், இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தொகுதி பொறுப்பாளா்கள் கலந்து கொள்வாா்கள் என்றும் இந்தக் கூட்டம் வரைவு வாக்காளா் பட்டியல் சரிபாா்த்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.