பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எம்.எட். சோ்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்: அமைச்சா் கோவி.செழியன்

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளதாக அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்துள்ளாா்.

News image
தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்
Updated On :11 ஆகஸ்ட் 2025, 11:35 pm

Chennai

சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஆக.11) முதல் தொடங்கியுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 எம்.எட். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நிகழ் கல்வியாண்டிற்கான (2025-26) மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவை திங்கள்கிழமை (ஆக.11) முதல் ஆக.20-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம்.

அதன் பிறகு, ஆக.25-இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆக.26 முதல் ஆக.29 வரை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பா் 1 முதல் வகுப்புகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.