கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு புதன்கிழமை (அக். 2) நடைபெறவுள்ளது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திடலில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை வகிக்கிறார்.
மாநாட்டில் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மயிலாடுதுறை எம்.பி. ஆர்.சுதா, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய மகளிரணிச் செயலர் ஆனி ராஜா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் உ.வாசுகி, மதிமுக துணை பொதுச் செயலர் மருத்துவர் ரொஹையா ஷேக் முகமது மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுப் பேசுகின்றனர்.
மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெண்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குரிய ஏற்பாடுகளை விசிக மேற்கொண்டு வருகிறது. மாநாட்டுப் பகுதியில் சுமார் 50,000 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் தலைமையில், எஸ்.பி.க்கள் ரஜத் ஆர்.சதுர்வேதி (கள்ளக்குறிச்சி), வி.வி.சாய் பிரனீத் (செங்கல்பட்டு) மேற்பார்வையில், 11 ஏடிஎஸ்பிக்கள், 20 டிஎஸ்பிக்கள், 50 காவல் ஆய்வாளர்கள், 150 உதவி ஆய்வாளர்கள் உள்பட சுமார் 1,200 போலீஸார் மாநாட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது ஒழிப்பை மறந்த கட்சிகள்!

மது, போதைப் பொருள்களை ஒழித்தால் மட்டுமே பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்: செளமியா அன்புமணி

தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!
வீடியோக்கள்

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை


