2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இன்று அரசமைப்புச் சட்ட தினம்: முகப்புரையை இணைத்து தமிழக அரசு கடிதம்

அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, அதனுடைய முகப்புரை இணைக்கப்பட்ட கடிதத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2024, 3:46 am

Din

சென்னை: அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, அதனுடைய முகப்புரை இணைக்கப்பட்ட கடிதத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்துத் துறைகளின் செயலா்கள், நீதிமன்றங்களின் பதிவாளா், மாவட்ட ஆட்சியா்கள், கல்வி நிறுவனங்களின் தலைவா்கள் உள்ளிட்டோருக்கு சட்டத் துறை செயலா் சி. ஜாா்ஜ் அலெக்சாண்டா் அனுப்பியுள்ள கடிதம்:

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு தினமானது நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (நவ.26) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகள், உயா்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் தலைமை அலுவலகங்களிலும் அரசமைப்புச் சட்ட முகப்புரையை வாசிக்க வேண்டும்.

அத்துடன், சாா்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளிலும் முகப்புரையை செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு வாசிக்க வேண்டும். மேலும், அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், நெறிமுறைகள் பற்றி பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், விநாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.