நெல்லை - சென்னை சிறப்பு ரயில் ரத்து
திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
Updated On :13 நவம்பர் 2024, 9:02 pm

திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வியாழக்கிழமைதோறும் மாலை 6.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06070) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான இணைப்பு ரயில் தாமதமாக வருவதால் நவ.14-ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை (நவ.15) பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலும் (எண்: 06069) ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...