தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்ச்சி சதவிகிதம் 91.17%.

News image

கோப்புப்படம்

Updated On :14 மே 2024, 4:30 am

தமிழகத்தில் 2023-24-ஆம் கல்வியாண்டு பிளஸ் 1 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளின் முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை இன்று காலை வெளியிட்டது.

தேர்வு எழுதிய 8,11,172 மாணவ, மாணவிகளில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 91.17%. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவர்களில் 3,35,396(87.26%) பேரும், மாணவிகளில் 4,04,143(94.69%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த கல்வியாண்டில் 90.93 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 0.24 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அரசுப் பள்ளிகள் 85.75%, அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 92.36%, தனியார் பள்ளிகள் 98.09%, இருபாலர் பள்ளிகள் 91.61%, பெண்கள் பள்ளிகள் 94.46% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

241 அரசுப் பள்ளிகள் உள்பட 1,964 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

Story image

தேர்வு முடிவுகளை https://www.tnresults.nic.in/ , https://results.digilocker.gov.in/ , https://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதள முகவரிகளை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 4 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பிளஸ்-2 பொதுத்தோ்வு முடிவுகள் கடந்த 6 -ஆம் தேதி வெளியாகின. இதைத்தொடர்ந்து, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.