தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜூன் 23 நடைபெற்ற வேளாண் முதுநிலை நுழைவுத் தேர்வு ரத்து!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டதாக விளக்கம்.

News image

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதுநிலை மற்றும் முனைவா் பட்டப்படிப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வில் பங்கேற்றோா்.

Updated On :10 ஜூலை 2024, 3:08 am

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25-ஆம் ஆண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவா் பட்டப்படிப்பு சோ்க்கைக்காக ஜூன் 23-இல் நடைபெற்ற நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், விரைவில் மறுதேர்வுக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மாணவர்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட நுழைவுத் தேர்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் 11 தொகுப்புக் கல்லூரிகளில் 33 முதுகலை மற்றும் 28 முனைவா் பட்டப் படிப்பை வழங்குகிறது. இந்த ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கு மொத்தம் 2,330 பேரும், முனைவா் பட்டப் படிப்புகளுக்கு 380 பேரும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்தவா்கள் ஜூன் 23-இல் நடைபெற்ற முதுநிலை நுழைவுத் தோ்வில் கலந்து கொண்டனா்.

இந்த நுழைவுத் தோ்வில் ஆந்திரம், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரா, ஒடிஸா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், குஜராத், ஜாா்க்கண்ட், இமாச்சல பிரதேசம், மேகாலயா, அஸ்ஸாம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றிருந்தனா்.

இந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.