தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

திருச்சியில் குடியரசு நாள்  கொண்டாட்டம்!

திருச்சி மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு நாள் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

News image
தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆட்சியர் பிரதீப் குமார்.
Updated On :7 பிப்ரவரி 2024, 3:13 pm

DIN

திருச்சி: நாடு முழுவதும் 75 ஆவது குடியரசு நாள் விழா கோலாகலமாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு நாள் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

மாநகரக் காவல்துறை ஆணையர் என். காமினி, மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், மத்திய மண்டல டிஐஜி மனோகர், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்  வருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆட்சியருக்கு மரியாதை அளித்தனர். தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். பின்னர் மூவர்ண பலூன்கள் மற்றும் ஒரு ஜோடி வெண்புறாக்களை பறக்க விட்டார். 

Story image

காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஆட்சியர்

தொடர்ச்சியாக வீரர்கள், காவல் துறையினர், பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெற்றது.

பின்பு சீருடை பணியாளர்கள், சமூக பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 432 பேருக்கு விருதுகளும், பதக்கங்களும், காசோலையும் வழங்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்கள். மேலும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 104 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Story image

மேலும், இந்த குடியரசு தின விழாவில் அரசு சார்பில் 33.38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து குடியரசு நாள் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளி,கல்லூரி மாணவிகளின் நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன 

முதல்முறையாக இந்த ஆண்டு பெண்கள் சிறப்பு காவல் படை அமைக்கப்பட்டு அவர்களும் இந்த குடியரசு  நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்றது கூடுதல் சிறப்பாக அமைந்தது.  

இதேபோல, திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு, மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மு. அன்பழகன், திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் கோட்ட மேலாளர் எம். எஸ். அன்பழகன்  ஆகியோர்  தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.