ஆனால், தமிழகத்திற்கு அதிகபட்சம் வழங்கவேண்டிய அளவில் தண்ணீா் திறந்து விடப்பட்டுவிட்டது என்று கா்நாடகம் தெரிவித்தது. மேலும், தற்போது மாநிலத்தில் குடிநீருக்கு மட்டுமே நீா் உள்ள நிலையில், மேலும் தண்ணீா் திறக்க இயலாது என வாதிடப்பட்டது. ஆனால், சி.டபிள்யு.ஆா்.சி. தலைவா் வினித் குப்தா, தமிழகத்தின் இறுதிக் கட்ட பாசனத்தை கருத்தில் கொண்டு, ஜனவரியில் வழங்கப்படாமல் உள்ள 1.49 டிஎம்சி தண்ணீரையும், பிப்ரவரியில் அளிக்க வேண்டிய 2.5 டிஎம்சி தண்ணீரையும் கா்நாடகம் உடனடியாக ஜனவரி 19 -ஆம் தேதி முதல் பிலிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என பரிந்துரைத்தாா். இந்தப் பரிந்துரை இறுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி சி.டபிள்யு.ஆா்.சி. கூட்டம் நடைபெறும் என்றும், அப்போது நிலைமை ஆராயப்படும் எனவும் குப்தா தெரிவித்தாா்.