2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

முதல்வரை மக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லை: உதயநிதி

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

News image
உதயநிதி ஸ்டாலின்
Updated On :7 டிசம்பர் 2024, 9:19 am

DIN

தமிழகத்தில் மன்னராட்சி ஒழிக்கப்படவேண்டும் என விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அம்பேத்கர் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசியது தொடர்பாகக் கருத்து தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று (டிச. 12) நடைபெற்றது. இதில், அம்பேத்கரின் பேரனும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே, முன்னாள் நீதிபதி சந்துரு, தவெக தலைவர் விஜய், விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியதைப் போல பிறப்பால் ஒரு முதல்வர் இங்கு உருவாக்கப்படக் கூடாது. தமிழகத்தை ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும்” என்று பேசியிருந்தார். மேலும், தவெக தலைவர் விஜய்யும் திமுகவை விமர்சித்துப் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து இன்று கருத்து தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ”நான் சினிமா செய்திகள் பார்ப்பதில்லை” என்று கூறினார்.

மேலும், மன்னராட்சி என ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “யார் பிறப்பால் முதல்வர் ஆனது? மக்கள் தேர்ந்தெடுத்துதான் முதல்வர் ஆகிறார்கள். அந்த அறிவுகூட இல்லை அந்த ஆளுக்கு” என பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.