வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

முதலீடுகளை ஈர்க்கும் முதல்வர்: நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்பந்தம்!

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 8 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.

News image

முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா - படம் | முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

Updated On :30 ஆகஸ்ட் 2024, 5:24 am

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இவற்றின் மூலம் தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி வசதிகளை இந்த நிறுவனங்கள் மேம்படுத்தும்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கும் எட்டப்படும்.

ரூ. 450 கோடி முதலீட்டில் நோக்கியா நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 பேருக்கு வேலைவாய்ப்புகளும், யீல்ட் என்ஜினீயரிங் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கோயம்புத்தூரில் ரூ. 150 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தித் தொழிற்சாலையும் 300 பேருக்கு வேலைவாய்ப்புகளும், சென்னையில் கீக்மைண்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் 500 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றித் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவில், “சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுமார் ரூ. 900 கோடிக்கும் அதிகமான முதலீடுகளில் 4,100 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

நோக்கியா நிறுவனத்தில் ரூ. 450 கோடியில் 100 வேலை வாய்ப்புகளும், பேபால் நிறுவனத்தில் 1,000 வேலை வாய்ப்புகளும், மைக்ரோசிப் நிறுவனத்தில் ரூ. 250 கோடியில் 1,500 வேலைவாய்ப்புகளும், இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தில் ரூ. 50 கோடியில் 700 வேலைகளும், அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனத்தில் 500 வேலைகளும் உருவாக்கப்படவுள்ளன.

சுற்றுப் பயணம் முடிய இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், தொடர்ந்து முனைந்து, அதிக முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டிற்கு ஈர்த்து, ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்” என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.