தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

யானைகளுக்கு ஷவர் பாத், குளியல் தொட்டி: நம்ம தமிழகத்தில்தான்!

யானைகளுக்கு ஷவர் பாத், குளியல் தொட்டி வசதிகள் நம்ம தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News image

ANI

Updated On :3 ஏப்ரல் 2024, 6:12 am

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மூலம், கோடை வெப்பம் அதிகரித்துவரும் நிலையில் யானைகள் வெப்பத்தை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யானைகள் நடமாட்டம் அதிகமிருக்கும் வனப்பகுதிகளில் கோடைக்காலங்களில் நீர்நிலைகள் வற்றிவிடுவதால் யானைகள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் ஊருக்குள் வருவது அதிகரிப்பது வழக்கம்.

இந்த நிலையில்தான், திருச்சியில் உள்ள யானைகள் முகாமில், ஆங்காங்கே, யானைகள் மீது தண்ணீர் விழும் வகையில், ஷவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், குழிகள் ஏற்படுத்தப்பட்டு சேறு இருக்குமாறும் அதில் யானைகள் சேற்றுக்குளியல் போட வசதியும் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் தண்ணீர் தொட்டிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரி கிருத்திகா பேசுகையில், வனத்துறை மூலம், ஆண்டுதோறும் யானைகள், கோடை வெப்பத்திலிருந்து சமாளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இங்குள்ள யானைகள் முகாமில் 11 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. உரிமம் இல்லாமல் யானைகள் வைத்திருப்பவர்கள் அல்லது சரியாக பராமரிக்கப்படாத உரிமையாளர்களிடமிருந்து யானைகள் பறிமுதல் செய்யப்பட்டு இங்கு அழைத்து வரப்படும்.

இங்குள்ள யானைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும். தொடர்ந்து கால்நடை மருத்துவர்களும் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.