திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மூலம், கோடை வெப்பம் அதிகரித்துவரும் நிலையில் யானைகள் வெப்பத்தை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யானைகள் நடமாட்டம் அதிகமிருக்கும் வனப்பகுதிகளில் கோடைக்காலங்களில் நீர்நிலைகள் வற்றிவிடுவதால் யானைகள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் ஊருக்குள் வருவது அதிகரிப்பது வழக்கம்.
இந்த நிலையில்தான், திருச்சியில் உள்ள யானைகள் முகாமில், ஆங்காங்கே, யானைகள் மீது தண்ணீர் விழும் வகையில், ஷவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், குழிகள் ஏற்படுத்தப்பட்டு சேறு இருக்குமாறும் அதில் யானைகள் சேற்றுக்குளியல் போட வசதியும் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் தண்ணீர் தொட்டிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரி கிருத்திகா பேசுகையில், வனத்துறை மூலம், ஆண்டுதோறும் யானைகள், கோடை வெப்பத்திலிருந்து சமாளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இங்குள்ள யானைகள் முகாமில் 11 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. உரிமம் இல்லாமல் யானைகள் வைத்திருப்பவர்கள் அல்லது சரியாக பராமரிக்கப்படாத உரிமையாளர்களிடமிருந்து யானைகள் பறிமுதல் செய்யப்பட்டு இங்கு அழைத்து வரப்படும்.
இங்குள்ள யானைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும். தொடர்ந்து கால்நடை மருத்துவர்களும் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன: மு.வீரபாண்டியன்

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்த 4 போ் கைது

அரசுப் பணியாளா்களின் கைகளில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு மருதாணி!

திருவாடானை பகுதியில் கோடை உழவு மும்முரம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


