கோவை: 2018ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதல் முறையாக, சிறைக் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போக்சோ குற்றவாளி தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, கோவை மத்திய சிறைச்சாலையின் மூன்று அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய 32 வயதான போக்சோ குற்றவாளியையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த விஜயரத்தினம், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, 2019 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க.. கண்ணீரைத் துடைக்க ஆப்கனிலிருந்து வரும் வெங்காயம்
இவர் உள்பட 20 சிறைக் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில், பாரதியார் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் விடுதலை பெட்ரோல் நிலையத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டிருந்தன.
இந்தியன் ஆயில் நிறுவனமும், தமிழகத்தின் சிறைத் துறையும் இணைந்து இந்த பெட்ரோல்நிலைய திட்டத்தை 2018 முதல் செயல்படுத்தி வருகிறது. இங்கு பணியாற்றும் கைதிகளை, சிறைத் துறை காவலர்கள் கண்காணித்து, பணி முடிந்ததும் சிறைக்கு அழைத்து வருவார்கள். இதற்காக அவர்களுக்கு மாதம் ரூ.6,000 ஊதியம் வழங்கப்படும்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு நேரப் பணியில் விஜயரத்னம் உள்பட 8 பேர் இருந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை அவர்களை அழைத்துச் செல்ல சிறை வாகனம் வந்தபோது விஜயரத்தினம் இல்லை என்பது தெரிய வந்தது.
இது குறித்து உடன் வேலை செய்த சிறைக்கைதிகள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கண்காணிப்புப் பணியில் இருந்த மூன்று சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறைக் கைதிகள் பணியாற்றும் விடுதலை பெட்ரோல் நிலையங்களில் 24 மணி நேர கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல் முறையாக..
இந்த திட்டம் 2018ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்பச் சூழல், குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்த பிறகு சிறைக் கைதிகள் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். குறிப்பாக நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை கழித்த பிறகே இப்பணிக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களது ஊதியம், அவர்களது குடும்பத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சிறைத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு சேகரித்ததாக இரு தரப்பினா் இடையே வாக்குவாதம்

பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும்: அமெரிக்க எம்.பி. பிராட் ஷொ்மன்

ஜனநாயக கடமையாற்றிய 90 வயது மூதாட்டி

நாமக்கல், ஓமலூா், சேலத்தில் திருமணக்கோலத்தில் வாக்களித்த தம்பதிகள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


