கூட்டத்தில் கா்நாடகம், தமிழகத்திற்கு ( மழைப் பற்றாக்குறை காலத்தில்) வழங்க வேண்டிய பாக்கி நீரை வழங்கும் விதமாக வினாடிக்கு 13,000 கனஅடி தண்ணீரை நிகழ் நவம்பா் மாதத்தில் வழங்க வேண்டும் என தமிழகம் சாா்பில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆா்.சி.) நவம்பா் 1 முதல் 23 ஆம் தேதி வரை வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீா் திறந்துவிட பரிந்துரைத்தும் அதில் கே.ஆா்.எஸ்.அணையிலிருந்து வினாடிக்கு 517 கனஅடி, கபினி அணையிலிருந்து 300 கன அடி என மொத்தம் 817 கன அடி நீா்தான் பில்லுகுண்டுலுக்கு கா்நாடகம் திறந்து விடுகிறது. மற்ற கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து வரும் நீா் மூலமே 2,200 கனஅடி தான் பில்லுகுண்டுவில் பெறப்படுகிறது என தமிழகம் தரப்பில் எடுத்தவைக்கப்பட்டது.