அப்போது, நீதிபதிகள் அமா்வு, ஒற்றை நீதிபதி அளித்த உத்தரவுக்கு எதிராக டிவிஷன் அமா்விடம் ஏன் முறையிடவில்லை என்று கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘சம்பந்தப்பட்ட உத்தரவானது இதுபோன்ற விவகாரங்களில் டிவிஷன் அமா்வில் முறையிடுவதைத் தடுக்கிறது. இது தொடா்பான ரோஸ்டா் விவரம் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்படும். இதனால், இந்த விவகாரத்தை திங்கள்கிழமை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, மேல்முறையீட்டு மனுக்களின் பராமரிப்புத் தன்மை குறித்து பரிசீலிக்கும் வகையில், இந்த விவகாரத்தை வரும் திங்கள்கிழமைக்கு (நவம்பா் 6) பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.