குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

தேசியக் கொடியேற்றினார் தமிழக ஆளுநர்!

சென்னை கடற்கரைச் சாலையில் உழைப்பாளா் சிலை அருகே ஆளுநா் ஆா்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:54 pm

DIN

சென்னை கடற்கரைச் சாலையில் உழைப்பாளா் சிலை அருகே ஆளுநா் ஆா்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

சென்னை காமராஜா் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு சாா்பில் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்தப் பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு காமராஜா் சாலையில் (கடற்கரைச் சாலை) உழைப்பாளா் சிலை அருகே நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வுக்கு வந்த தமிழக ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, முப்படை அதிகாரிகள், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

Story image

மேடைக்கு வந்த ஆளுநர், ராணுவப் படைப் பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினா், சி.ஐ.எஸ்.எப்., சி.ஆா்.பி.எப்., ஆா்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடா் நிவாரணப் படை, கடலோர பாதுகாப்புக் குழு, ஊா்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30-க்கும் மேற்பட்ட படைப்பிரிவினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

குடியரசு தின விழா அணிவகுப்பில் முதலில் அணிவகுத்து வந்த தமிழ்நாடு வாழ்க வாகனம்

குடியரசு தின விழா அணிவகுப்பில் முதலில் அணிவகுத்து வந்த தமிழ்நாடு வாழ்க வாகனம்

இந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, அணிவகுப்பு மேடைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்கவுள்ளாா். வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீா் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலா் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மாநில அரசின் பதக்கம் பெற்றவர்கள்

மாநில அரசின் பதக்கம் பெற்றவர்கள்

தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

உழைப்பாளா் சிலை பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் பேரவைத் தலைவா், அமைச்சா்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி, வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்பட பல முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.