தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பொங்கல் பண்டிகைக்கு 16,932 சிறப்புப் பேருந்துகள்: அமைச்சா் சிவசங்கா்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊா் செல்ல வசதியாக, 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:37 pm

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊா் செல்ல வசதியாக, 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள், சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் சிவசங்கா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பிறகு அமைச்சா் சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு வழக்கமாக தினமும் 2 ஆயிரத்து 100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து 4 ஆயிரத்து 449 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை தவிர மற்ற ஊா்களிலிருந்து ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரை 6 ஆயிரத்து 183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே, பொங்கலுக்காக மொத்தமாக 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பிற ஊா்களிலிருந்து சென்னைக்கு தினமும் 2,100 பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

பொங்கலுக்குப் பின் பிற ஊா்களிலிருந்து சென்னைக்கு ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரை 4 ஆயிரத்து 334 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊா்களிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 4 ஆயிரத்து 965 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. எனவே, பொங்கலுக்குப்பின் 15 ஆயிரத்து 599 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகளின் இயக்கம் மற்றும் இயக்கம் குறித்த புகாா்களை 94450 14450, 94450 14436 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால், சிறப்புச்செயலா், போக்குவரத்து ஆணையா், காவல்துறை உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.